For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களவையில் தமிழக-கேரள எம்பிக்கள் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் தமிழக, கேரள எம்பிக்கள் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் இந்த விவகாரத்தை கேரள காங்கிரஸ் எம்பியான பிரான்சிஸ் ஜார்ஜ் கிளப்பினார். முல்லைப்பெரியாறு விவகாரத்தால் கேரளத்தின் இதயப் பகுதியில் பெரும் அபாயகரமான சூழல் உருவாகி வருகிறதுஎன்றார்.

அவருக்கு ஆதரவாக மாத்ருபூமி பத்திரிக்கையின் உரிமையாளரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்பியுமானவீரேந்திர குமார், சிபிஎஎம்மின் கிருஷ்ணதாஸ், பி.சி. தாமஸ் ஆகிய எம்பிக்களும் பேசினர்.

ஜார்ஜ் தாமஸ் தமிழகத்தைக் குறைகூறிப் பேச ஆரம்பித்தவுடன், திமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழக எம்பிக்கள்எழுந்து கேரளத்துக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை இங்குவிவாதிக்கவே அனுமதிக்கக் கூடாது என்றனர்.

இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, மக்களின் பிரச்சனைகளை வைத்து அவை பிளவுபடக் கூடாது என்றார்.

ஆனாலும் தமிழக, கேரள எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

ஆழ்ந்த அமைதியில் ஜெ - ஏன்?

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள காங்கிரஸ் அரசுமதித்து நடக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையின்முழுப் பராமரிப்பையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணையின் உயரத்தை எக்காரணம் கொண்டும்உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, கேரள காங்கிரஸ் அரசின் போக்கைக்கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாமல், 136 அடிஉயரத்தை 142 அடி உயரமாக அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால், தேவையில்லாமல் இரு மாநில நல்லுறவு பாதிக்கப்படும்.

இரு மாநிலங்களிலும் நட்புடன் பழகி வரும் இரு தரப்பு மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்றுகூறியுள்ளார் அவர்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டியோ, வரவேற்றோ இதுவரைமுதல்வர் ஜெயலலிதா எந்தவித அறிக்கையும் நேரடியாக விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் கருணாகரனின் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ள நிலையில்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட்டால் பிரச்சினை வரும் என யோசிக்கிறாரோ என்னவோ?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X