தேர்தல்-5000 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் முதல்டி.எஸ்.பி. வரையிலான 5,000 போலீஸார் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோர் மற்றும் சொந்த ஊரில்பணியாற்றுவோரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மாற்றப்பட வேண்டியவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது.
காவல்துறையில், இன்ஸ்பெக்டர் முதல் டி.எஸ்.பி. பதவி வரையிலான அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்படவுள்ளனர். இடமாற்றம் செய்யப்படவுள்ள அதிகாரிகள் குறித்து டி.ஜிபி. அலெக்சாண்டர், காவல்துறைஅதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.
மொத்தம் 5,000 அதிகாரிகள் இவ்வாறு மாற்றப்படவுள்ளனர். ஏற்கனவே சென்னை, மதுரை, நெல்லை, சேலம்,திருச்சி ஆகிய இடங்களில் பல உயர் காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications