தனியாகத் தான் போட்டி: சொல்கிறது பாஜக
ராமேஸ்வரம்:
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக விளங்குகிறது. எனவே தனித்துப் போட்டியிடுவோம் என்று பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக அணியில் இடம் இல்லை என்ற நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு விட்டது. ஒன்று தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது குட்டிக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு 3வது அணி அமைக்க வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. இந்த வெட்டி வேலைக்கு பாஜக தயாராக இல்லை என்று தெரிகிறது.இந் நிலையில் ராமேஸ்வரத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு மாற்றான ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே நாங்கள் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்.
எங்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க சில சிறு கட்சிகள் தயாராக உள்ளன. அவர்களையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 3வது அணி அமைத்துப் போட்டியிடுவோம்.
தேர்தல் தொடர்பான உத்திகள் குறித்து ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது என்றார் நாயுடு.
நாயுடு இவ்வாறு கூறினாலும் அதிமுக கூப்பிடாதா என்ற மனநிலையில் தான்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் உள்ளனர்.
ஆமா.. அப்புறம் டெபாசிட்டாவது திரும்பி கிடைக்க வேண்டாமா?












Click it and Unblock the Notifications