அணு ஒப்பந்தம்: புடினிடம் பிரதமர் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள அணு ஒப்பந்தம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினிடம் பிரதமர்மன்மோகன் சிங் விளக்கினார்.
இந்திய அணு மின் நிலையங்களில் 14 நிலையங்களை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் மேற்பார்வையில்கொண்டு வர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மீதியுள்ள 8 ராணுவ அணு மின் நிலையங்களை இந்தக் கழகத்தின்கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா மறுத்துவிட்டது.இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் புஷ்-மன்மோகன் சிங் இடையே சமீபத்தில் டெல்லியில்கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான முழு விவரங்களை இன்னும் இரு அரசுகளும் வெளியிடவில்லை. இந் நிலையில்இது குறித்து புடினிடம் தொலைபேசியில் விளக்கினார்.
அப்போது இரான் அணு விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.












Click it and Unblock the Notifications