10ம் தேதி திமுக முதல் நேர்காணல் தொடக்கம்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்துள்ள திகவினரிடம்வரும் 10ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் மார்ச் 10ம் தேதி முதல்நேர்காணல் தொடங்குகிறது.
கருணாநிதி தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தும்.
காலை 9.30 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெறும். சீட் கேட்டு மனு செய்தவர்கள் தவிர, சம்பந்தப்பட்டமாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மட்டுமே இந்த நேர்காணலுக்கு வரலாம்.
கூடவே ஆதரவாளர்களையோ, வேறு யாரையுமே கூட்டிக் கொண்டு வரக் கூடாது.
10ம் தேதி தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நிடைபெறும். 11ம்தேதி திருவள்ளூர் மாவட்டம், 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேர்காணல் நடைபெறும். பிறமாவட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.