ரயிலில் மகனின் பிணத்தோடு வந்த தந்தை !!
சென்னை:
கிட்னி பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிக்க கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம்செய்தார் தந்தை. ஆனால், மகன் வழியில் ரயிலிலேயே மரணடைந்தார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் துர்காசங்கர் மிஸ்ரா. இவரது மகன் சந்தீப் குமார் (17) இரு கிட்னிகளும்பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். அவருக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவனைையில் சிகிச்சை அளிக்ககொல்கத்தாவில் இருந்து அழைத்து வந்தார் மிஸ்ரா.கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் வந்தனர். நேற்றிரவு அந்த ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தபோது சந்தீப் மயக்கமடைந்தார். பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்தபோது சந்தீப்இறந்துவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த தந்தை மகனின் பிணத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையம் வரைபயணம் செய்தார். மகனின் உடலை ரயிலிலேயே விட்டுவிட்டு, உதவிக்கு யாரையாவது அழைக்கவும், அடுத்துஎன்ன செய்வது என்ற தவிப்பிலும் ரயிலை விட்டு கீழே இறங்கி கண்ணீருடன் அலைந்துள்ளார் மிஸ்ரா.
முதலில் ஒரு சக்கர நாற்காலியைக் கொண்டு வந்து மகனின் உடலை கீழே இறக்கலாம் என்று ரயில் நிலையத்தில்அலைந்தார் மிஸ்ரா. ஆனால், நம் ஊர் ரயில் நிலையத்தில் அதெல்லாம் இருக்குமா?. சக்கர நாற்காலிக்காகஅலைந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பி ரயில் நின்றிருந்த இடத்துக்கு வந்தவருக்கு அதிர்ச்சி.
ரயில் அங்கு இல்லை. ரயிலில் இருந்து எல்லோரும் இறங்கிவிட்டார்களா, சரக்குகள் இறக்கப்பட்டுவிட்டனவாஎன்று கூட சரி பார்க்காமல் ரயிலை யார்டுக்குக் கொண்டு போய்விட்டனர் ஊழியர்கள். சந்தீப்பின் உடலும்ரயிலில் போய்விட்டது.
அதிர்ந்து போன மிஸ்ரா ரயில்வே போலீசாரிடம் போய் அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்றுரயிலில் இருந்த உடலை மீட்டனர். சந்தீபின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டது.
மகனை பிழைக்க வைப்பதற்காக தமிழகம் அழைத்து வந்த தந்தை, அவரை ரயிலிலேயே பறி கொடுத்துவிட்டுக்கதறியது மனதைப் பிசைந்தெடுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications