செக்ஸ் டார்ச்சர்: கணவர் மீது மனைவி புகார்
சென்னை:
வரதட்சணை கேட்டும், ஆபாசப் படங்களைக் காட்டி செக்ஸ் கொடுமையும் செய்த கணவர் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி இளம்பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்துள்ளார்.
சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகரில் நகைக் கடை வைத்திருப்பவர் பக்தாராம். இவரது மனைவி துர்கா(வயது 24) சென்னை நகர காவல்துறை ஆணையர் நட்ராஜிடம் இன்று ஒரு புகார் தந்தார்.அதில்,
என் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி என் கணவர் பக்தாராம் தினமும் கொடுமைப்படுத்தி வந்தார்.அவரது அடி, உதை தாங்க முடியாமல் என் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் வரதட்சணை வாங்கித் தந்தேன்.
ஆனாலும் தொடர்ந்து மேலும் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறார். அத்தோடு அவருக்கு புளுபிலிம் பார்க்கும் பழக்கமும் குடிப் பழக்கமும் உண்டு. தினமும் குடித்துவிட்டு புளு பிலிம் பார்ப்பார்.
அந்த ஆபாசப் படங்களை என்னையும் பார்க்கச் சொல்லியும் அதே போல செக்ஸ்சில் ஈடுபடச் சொல்லியும்என்னை கொடுமைப்படுத்துகிறார்.
சமீபத்தில் பணம் வாங்கி வரச் சொல்லி வீட்டை விட்டு விரட்டுவிட்டார். இதையடுத்து என் அண்ணன் வீட்டில்தஞ்சம் புகுந்துள்ளேன்.
தனது வரதட்சணை கொடுமையை மறைப்பதற்காக குடும்ப நலக் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்து,என்னை குடும்பம் நடத்த வருமாறு நாடகம் ஆடுகிறார்.
என் கணவரின் கொடுமைகளுக்கு மாமனார், மாமியார், கணவரின் பெரியப்பா ஆகியோரும் உடந்தையாகஉள்ளனர்.
எனவே என் கணவர், மற்றும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் சீதனமாகக் கொண்டு போன 720 கிராம் நகை, 2 கிலோ வெள்ளி நகை, ரூ. 1 லட்சம் ஆகியவற்றையும்வரதட்சணையாகத் தந்த ரூ. 5 லட்சத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று கோரியுள்ளார் துர்கா.












Click it and Unblock the Notifications