பொலிடிக்கல் பாக்ஸிங் : முதல் சுற்றில் அம்மா முன்னணி!
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய இப்போதைய நிலவரப்படி, முதல் சுற்றில்ஜெயலலிதாவின் கை ஓங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஜூரம் தமிழகத்தில் படு வேகமாக பரவி வருகிறது. திருத்தணி முதல்கன்னியாகுமரி வரை எங்கு பார்த்தாலும் தேர்தல் குறித்த பேச்சுதான்.அரசியல் கட்சிகளின் கூட்டணி முயற்சிகள், யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும், யார்அடுத்த முதல்வர், எந்தக் கட்சி இந்த தேர்தலில் திவாலாகும் என பொதுமக்களின்வாயில் அடிபட்டு, அரைபட்டுக் கிடக்கிறது தமிழக அரசியல் நிலவரம்.
தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்து, இப்போது திமுக, அதிமுககூட்டணிகள் ஒருமாதிரியாக செட் ஆகி விட்ட நிலையில், இதுவரை நடந்துள்ளஅரசியல் திருப்பங்களை ப் பார்க்கையில், தேர்தல் களத்தில் ஜெயலலிதாவின் கைஓங்கியிருப்பதாகவும், திமுக கூட்டணியை விட சற்றே முன்னணியில் இருப்பதாகவும்அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாமக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனமாபெரும் அரசியல் பலத்துடன் திமுக மிகத் தெம்பாக இருந்தது- சில வாரங்களுக்குமுன்பு வரை.
இப்போது மதிமுக ரூபத்தில் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் சதுரங்கம் இங்கேதான் ஆரம்பிக்கிறது.மக்களுடன் கூட்டணி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்கள் என் பக்கம் எனமுழங்கி வந்த ஜெயலலிதா வாக்குச் சதவீத அடிப்படையில் பார்த்தால் திமுககூட்டணியை விட அதிக படு பலவீனமாக இருந்தது உண்மை.
இதை உணர்ந்த அல்லது ஜெயலலிதாவுக்கு உணர்த்தப்பட்ட காரணத்தால், திமுககூட்டணியை உடைக்கும் வேலைகளை அதிமுக தொடங்கியது. அது குறி வைத்தபாமக கிடைக்காமல் போனதால் மதிமுகவை பெரும் மல்லுக்கட்டுக்குப் பின்னர்தூக்கிச் சென்றுள்ளனர்.
இது ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
பாமகப் பொருத்தவரை அவர்கள் யாருடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வெற்றிநிச்சயம் என்பது கடந்த கால வரலாறு. அந்த அளவுக்கு ஓட்டு வங்கியை நிலையாகதக்க வைத்துள்ள கட்சி அது.
ஆனால், இந்தமுறை அந்தக் கட்சியின் ஓட்டு வங்கியில் விஜய்காந்த் ரூபத்தில்ஓட்டை விழுந்துள்ளதாக பரவலாகக் கருதப்படுகிறது. விஜய்காந்த் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாமக பலம் வாய்ந்த வட மாவட்டங்களில்தான் அவருக்கு அதிகமான ரசிகர் மன்றங்களும் ஆதரவும் காணப்படுகிறது.
அதேசமயம், மதிமுகவைப் பொறுத்தவரை சராசரியாக மாநிலம் முழுவதுமே 4 முதல்6 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டுள்ளது. வைகோவின் பொடா கைதுக்குப் பின்இந்த வாக்கு வங்கி மேலும் சில சதவீதம் உயர்ந்தது உண்மை.
ஆனால், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி என்று பெண்டுலமாகத் தள்ளாடியவைகோவைப் பார்த்து அவரது தீவிர ஆதரவாளர்களே வெறுத்துப் போயுள்ளதும்அதே அளவுக்கு உண்மை.
கருணாநிதி முதல்வராக்குவேன், ஜெயலலிதாவை முத்லவராக்குவேன் என ஒரேவாரத்தில் இரு வேறு நாக்குகளில் பேசிய வைகோவை கேலியாகவே பார்க்கின்றனர்.
ஆனால், இதெல்லாம் தேர்தல் கிளப்பப் போகும் தூசியில் மறந்து போய்விடும் என்றமக்களின் மறதி மீது அதிக நம்பிக்கை வைத்து பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறார்வைகோ.
அவரது தனது வாக்கு வங்கியை பத்திரமாக மீட்டெடுத்து அதிமுகவுக்குத் தந்தால்ஜெயலலிதாவுக்கு பெரும் உதவியாக இருக்கப் போவது என்பது நிச்சயம்.
குறிப்பாக கொங்கு மண்டத்திலும் மதுரைக்கு அப்பால் உள்ள தென்மாவட்டங்களிலும் மதிமுகவின் வாக்கு வங்கி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஜெயலலிதா கணக்குபோட்டுள்ளார்.
அடுத்து, தலித்துகளின் வாக்கு வங்கி. சமீபகாலத்தில் தலித் சமூதாயத்தினர் மத்தியில்மிக வேகமாக நம்பிக்கை பெற்ற இயக்கமாக மாறியுள்ளது திருமாவளவனின்விடுதலை சிறுத்தைகள்.
ஏற்கனவே தலித்துகளின் வாக்குகள் ஓரளவுக்கு அதிமுகவுக்கு சாதகமாகவே உண்டு.இந் நிலையில் திருமாவளவனும் சேர்ந்திருப்பதால், அதிமுகவின் தலித் வாக்கு வங்கிகூடுதல் பலம் பெற்றுள்ளது.
முக்குலத்தோர் வாக்கு வங்கி என்பது உலகறிந்தது. அச் சமூகத்தில்பெரும்பாலானவர்களின் கட்சியாக விளங்குவது எம்ஜிஆர் கட்சியான அதிமுக தான்.
முக்குலத்தோர் இனத்தவர்களைக் கவரும் வகையிலான கேரக்டர்களிலேயேபெரும்பாலும் நடித்தவர் எம்.ஜி.ஆர். மதுரை வீரனில் ஆரம்பித்து அவரதுபெரும்பாலான படங்களில் அவரது பெயர்களும் கேரக்டரும் முக்குலத்தோர் சமூகசாயல் கொண்டவையாகவே அமைந்தன.
அதன் மூலம் முக்குலத்தோரை வளைத்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் காலத்தில்இருந்ததைவிட இப்போது அதிமுகவுக்கு முக்குலத்தோரின் ஆதரவுஅதிகரித்துவிட்டது. காரணம், சசிகலா.
இது தவிர கொங்கு மண்டலத்திலும் காங்கிரஸ்-அதிமுக கூட்டணியே காலங்காலமாகவென்று வந்துள்ளது. இந்தப் பகுதியில் திமுகவுக்கு அடுத்தபடியாக மதிமுகவும் மிகவேகமாக வளர்ந்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் காங்கிரசால் இழக்கும்வாக்குகளை மதிமுகவைக் கொண்டு சரி செய்ய அதிமுக முயல்கிறது.
அதே நேரத்தில் இப் பகுதியில் தனது சக்தியோடு காங்கிரஸையும் பெரிதும்நம்பியுள்ளது திமுக.
அடுத்தது, வன்னியர்கள் ஓட்டு. வன்னியர்களின் ஏகோபித்த தலைவராக திகழ்கிறார்டாக்டர் ராமதாஸ். இன்றும்,வன்னியர் என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால்வன்னியர் என்ற நிலைதான் உள்ளது.
அதை அவ்வளவு சீக்கிரம் மாற்றி விட முடியாது என்பது ஜெயலலிதா, ரஜினிபோன்றவர்கள் படித்த பாடம்.
தனது அமைச்சரவையில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அடுத்தபடியாகவன்னியர்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பொறுப்புகளைக் கொடுத்துப் பார்த்தார்ஜெயலலிதா. செம்மலை, சி.வி.சண்முகம் என நிறையப் பேர் வன்னியர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆனால், இவர்கள் எல்லாம் ராமதாஸ் என்ற ஆலமரத்தின் முன் சின்னச் சின்னதக்காளிச் செடிகளாகவே உள்ளனர். இவர்கள் யாரும் பெரிய அளவில்வன்னியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிரிந்து கிடக்கும் வன்னியர் தலைவர்களை ஒருங்கிணைக்க ஜெயலலிதா நடவடிக்கைஎடுத்தார். அதன் பலனாக, வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன், முன்னாள்பாமக துணை பொதுச் செயலாளர் பேராசிரியர் தீரன், ராமதாஸுக்கு வலதுகரம்போலத் திகழ்ந்தவரான பு.தா. இளங்கோவன் என மூன்று பேரை வைத்துவன்னியர்கள் என் பக்கம் என்பது போலக் காட்டிக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
தானோ அல்லது தனது குடும்பத்தினரோ எந்தக் காலகட்டத்திலும் அரசுப் பொறுப்போ,அமைச்சர் பொறுப்போ வகிக்க மாட்டோம் என்று முழங்கியவர் ராமதாஸ். ஆனால்இன்று அவரது மகன் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக உள்ளார்.
அவரது மகள் கவிதாவும் வரப் போகிற தேர்தலில் போட்டியிடப் போவதாக பேச்சுஎழுந்துள்ளது. மருமகள் செளமியாவும் பசுமைத் தாயகம் என்ற பெயரிலானஅமைப்பின் தலைவராக உள்ளார். அவரும் விரைவில் அரசியலில் குதிக்கக் கூடும்என கூறப்படுகிறது.
இப்படி நிலவி வரும் அதிருப்திகளை நடராஜன், தீரன், பு.தா. இளங்கோவன்ஆகியோரை பயன்படுத்தி கொளுந்து விட்டு எரிய வைத்து அதில் குளிர் காய்ந்துவிடலாம் என அதிமுக கணக்குப் போடுகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ராமதாஸுக்குக் கடும் போட்டியாக கருதப்படும்ஜெகத்ரட்சகனையும் தனது கூட்டணிக்கு இழுக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
ராமதாஸே மிரளும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருப்பவர் ஜெகத்ரட்சகன். ராமதாஸ்பாணியில், அடிமட்ட அளவிலிருந்து தனது ஜனநாயக முன்னேற்றக் கழகம் கட்சியைவளர்த்துக் கொண்டுள்ளார் ஜெகத்ரட்சகன். அவர் நடத்தி வரும் பொறியியல்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் வன்னிய சமுதாயமாணவர்களுக்கு இலவச சீட்கள் கொடுப்பதாகவும் பேச்சு உள்ளது.
விரைவில் ஜெகத்ரட்சகன் அதிமுகவில் ஐக்கியமாவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஜெயலலிதாவின் காய் நகர்த்தல்களையோ, இந்த வன்னிய இனத்தலைவர்களையோவிட ராமதாஸ் அச்சுவது விஜய்காந்தை நினைத்துத் தான் என்பதுஅந்த மாவட்டங்களில் பாமகவினர் பேசினால் புரியும்.
விஜயகாந்த்தையும் கூட்டணிக்குள் அதிமுக இழுத்துவிட்டால் வட மாவட்டங்களில்போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
அதே போல முக்குலத்தோர் வாக்கு வங்கியில் சிறிய அரிப்பை ஏற்படுத்தும் சக்திகொண்ட கார்த்திக்கையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டால் அதிமுக அணிமேலும் வலுவடைந்துவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இவற்றையெல்லாம் திமுக தலைவர் கருணாநதி உணராமல் இல்லை. திமுகவின்வழக்கமான வாக்கு வங்கி, பாமக உதவியோடு அத்தோடு வட மாவட்டங்களில்கரையேறிவிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.
ஆனால், பிற மண்டலங்களில் தான் பிரச்சனை. கொங்கு மண்டலத்திலும் மதுரைக்குஅந்தப் பக்கமும் அதிமுக-மதிமுகவை சமாளிக்க காங்கிரசின் ஓட்டு வங்கியையேபெரிதும் நம்பியுள்ளது திமுக.
தனது பிரசார உத்தி மூலம் அதிமுக கூட்டணிக்கு கருணாநிதி கவுண்டர் கொடுப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணி என்னதான் பெரிய சக்தி மாதிரி வெளியில் காட்டிக் கொண்டாலும்அது ஊதப்பட்ட பலூன் என்று திமுக நினைக்கிறது. அதிமுக அரசின் அந்த 5வருடங்களை மக்களிடம் சரியாக-முறையாக நினைவூட்டினாலே பலூனில்ஓட்டையைப் போட்டுவிடலாம் என்று திமுக கருதுகிறது.
தனது தொண்டர்களின் வேகத்தையும் ஆவோசமான அடித்தள பிரச்சாரத்தையும்வைத்து அதிமுக கூட்டணியை சமாளிக்க திட்டமிடுகிறார் கருணாநிதி.