For Daily Alerts
Just In
நான் ஒரு கிறுக்கன்: காமெடி செந்தில்
திருவண்ணாமலை:
நான் ஒரு ஜெயலலிதா கிறுக்கன் என்று அதிமுகவின் லேட்டஸ்ட் பேச்சாளரானசினிமா காமெடியன் செந்தில் கூறியுள்ளார்.
கடலாடி தொகுதியை அம்மா தனக்கு ஒதுக்குவார் என்று பெருத்த நம்பிக்கையுடன்உள்ளார். அதே உற்சாகத்தோடு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்துபிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.திருவண்ணாமலையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் செந்தில் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி என்னை கிறுக்கன் என்று வர்ணித்துள்ளார். அதைப் பற்றிநான் கவலைப்படவில்லை. நான் கிறுக்கன்தான். ஜெயலலிதாவின் மீது தீவிரப் பற்றுகொண்ட கிறுக்கன்.
தமிழில் கிறுக்கன் என்றால் பற்று கொண்டவன் என்று அர்த்தம். அந்த வகையில்அம்மா மீது தீவிர பற்றுக் கொண்ட என்னை கிறுக்கன் என்று அழைப்பதில் தவறேஇல்லை.
7 கட்சிக் கூட்டணியை உடைத்து இப்போது அம்மா பெரும் பலம் பெற்றுள்ளார்.வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அம்மாவுக்கே வெற்றி கிடைக்கும்,தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணி எங்கே என்று மக்கள் தேடப்போகிறார்கள் என்றார்கிறுக்கன் செந்தில்.
Comments
Story first published: Wednesday, March 8, 2006, 5:30 [IST]