மாப்ள வைகோ, மாப்ள திருமா: எஸ்எஸ்சந்திரன்
பாண்டிச்சேரி:
விபத்துல யாராவது செத்தா அம்மா (ஜெயலலிதா) ரூ. 50 ஆயிரம் ரூபாய அவுங்க குடும்பத்துக்கு தர்றாங்க.அதனால யாரப் பார்த்தாலும் இப்போ நடு ரோட்டுல தான் நடக்குறாங்க என நடிகரும் எம்பியுமான எஸ்எஸ்சந்திரன் பேசினார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கூட்டத்துக்கு வந்திருக்கும் நீங்கள் எல்லாம் எனக்கு மாப்பிள்ளைகள். அப்ப நான் உங்களுக்கு என்ன? மாமாதானே?. உடனே ஏற்பாடு செஞ்சு தாங்கன்னு ஏம் பின்னாடி வந்துறாதீங்க.
கூட்டத்துக்கு வந்திருக்கும் சின்ன வயசு பொண்ணுகள் எல்லாம் என் மருமகள்கள். பெரியவங்க எல்லாம் என்அத்தைமார்கள். என் பழைய பங்காளி, இன்றைய மாப்பிள்ளை வைகோ, மாப்பிள்ளை திருமாவளவன்ஆகியோர் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்துட்டாங்க.
கருணாநிதிய திட்ற வேலையை இனிமேல் வைகோவும் திருமாவளவனும் பார்த்துக்குவாங்க. தமிழ்நாட்லயும்பாண்டிச்சேரிலயும் மறுபடியும் அம்மா தான் ஆட்சியமைக்கப் போறாங்க.
விபத்துல யாராவது செத்தா அம்மா ரூ. 50 ஆயிரம் ரூபாய அவுங்க குடும்பத்துக்கு தர்றாங்க. அதனால யாரப்பார்த்தாலும் இப்போ நடு ரோட்டுல தான் நடக்குறாங்க.
இவ்வாறு எஸ்எஸ் பேசிக் கொண்டே போக மணி 10க்கு மேல் ஆகிவிட்டதால் அங்கு வந்த போலீசார் பவர்கனெக்ஷனை கட் செய்துவிட்டு மைக்கை தூக்கிச் சென்றனர்.
இதுவே தமிழ்நாடா இருந்தா நம்ம கூட்டத்துல போலீஸ் இப்படி நடந்துக்குமா என்றபடியே கீழே இறங்கிப்போனார் மாமா.. ஸாரி எஸ்எஸ் சந்திரன்.












Click it and Unblock the Notifications