For Daily Alerts
Just In
காசி தாக்குதல்-லஷ்கர் ஏ கஹார் பொறுப்பேற்பு
ஸ்ரீநகர்:
காசியில் (வாரணாசியில்) நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்க இதுவரை பெயர் தெரியாத அமைப்பானலஷ்கர்-ஏ-கஹார் என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காசியில் கோவிலிலும் ரயில் நிலையத்திலுமாக நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 பேர்காயமடைந்தனர். குக்கரில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இத் தாக்குதலையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லக்னெளவிலும் டெல்லியிலும்3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் காஷ்மீரில் உள்ள சிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்தை இன்று அப்துல் ஜப்பார் என்பவர்தொடர்பு கொண்டு,
காசியில் தங்களது லஷ்கர்-ஏ-கஹார் அமைப்பு தான் தாக்குதல் நடத்தியதாகவும், தான் அதன் செய்தித்தொடர்பாளர் என்றும் கூறியுள்ளான். மேலும் இது போல மேலும் தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும்மிரட்டினான்.
இதற்கிடையே காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களும் வாரணாசி தாக்குதலுக்கு கண்டனம்தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, March 9, 2006, 5:30 [IST]