அதிமுக கூட்டணி-ஐஎன்டியூசி தலைவருக்கு கல்தா
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. அதிமுகவுடன் கூட்டணிஅமைத்துக் கொண்டதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் சுப்பையா, பொதுச்செயலாளர் காளன் ஆகியோரை அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ்கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம் ஐ.என்.டி.யூ.சி. இதனால் தேர்தல்களில் காங்கிரஸ்கட்சிக்கே அது பாரம்பரியமாக ஆதரவு அளித்து வந்தது.இந் நிலையில் எல்லா கட்சிகளையும் கடப்பாறையைக் கொண்டு உடைத்து வரும்அதிமுகவிடம் ஐஎன்டியூசியும் மாட்டிக் கொண்டது. அதன் நிர்வாகிகளை அழைத்துகூட்டணி பேசி 2 சீட்களையும் தந்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
காங்கிரஸ் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுபோல எந்த மாநிலத்திலும் நடந்ததில்லைஎன்பதால் காங்கிரஸ் இதை பெரும் அவமானமாக கருதுகிறது.
இந் நிலையில், ஐ.என்.டி.யூ.சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னைசத்தியமூர்த்தி பவனில் கூடுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கிளைப்பிரிவான தொழிற்சங்கத்தை அதிமுகவிடம் அடகு வைத்து விட்டதாகக் கூறி காளன்,சுப்பையா ஆகியோரை டிஸ்மிஸ் செய்யும் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஐ.என்.டி.யூ.சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிர்வாகிகள் அனைவரும்அதிமுகவுக்குப் போய்விட்டகால் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியே நாளையகூட்டத்தைக் கூட்டி தலைமையும் தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.