இலங்கை ராணுவத்துக்காக கைதிகள் விவசாயம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை சிறைகளில் இருக்கும் குற்றவாளிகளை வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளுக்கு அனுப்பி அங்கு விவசாயம் செய்ய வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

யாழ்பாணத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க 40,000 ராணுவத்தினர்நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காய்கறிகள் விற்க புலிகள் தடை விதித்துள்ளனர்.

சுற்றிலும் கண்ணிவெடிகளால் புலிகள் அரண் அமைத்துள்ளதால் தரைழியாக காய்கறிகளைக் கொண்டு வருவதும்சிரமம். இதனால் தினமும் 1.5 டன் காய்கறிகளை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பிலிருந்துஅரசு அனுப்பி வருகிறது.

இதையடுத்து அங்கேயே விவசாயம் செய்து காய்கறிகளை விளைவிக்க திட்டமிட்டுள்ள இலங்கை ராணுவம்,சிறைகளில் உள்ள 200 குற்றவாளிகளை பலாலி ராணுவ முகாமுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த கைதிகள் விவசாயிகளாக மாறவுள்ளனர், அவர்களுக்கு மாத ஊதியமும் வழங்கப்படும் என ராணுவசெய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் போர் வெடித்தால் இந்தக் கைதிகள் தான் முதலில் பலியாகும் நிலை உள்ளது. விவசாயிகள்என்ற பெயரில் இவர்களை புலிகளுக்கு எதிராக போர் நடவடிக்கைகளிலும் ராணுவம் பயன்படுத்தலாம் என்றசந்தேகமும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+