திமுகவுக்கு படுதோல்வி நிச்சயம்: வைகோ சாபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையப் போவது நிச்சயம் எனமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் தங்களதுகட்சிகளிலிருந்து விலகி மதிமுகவில் இணைந்தனர்.வைகோ முன்னிலையில் கட்சியின் தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில்இவர்கள் மதிமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ஏராளமான திமுகவினர்எங்களை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும்வந்து சேருவார்கள்.
மதிமுக பொதுக்குழுவில் பொடா குறித்து சிலர் பேசியதாகவும், சலசலப்புஏற்பட்டதாகவும் ஒரு நச்சுப் பத்திரிக்கை, நிச்சுச் செய்தியை வெளியிட்டுள்ளது.ஆனால் அது அப்பட்டமான பொய், ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.
ஒருமித்த குரலில் அத்தனை உறுப்பினர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைவரவேற்றனர். ஒருவர் கூட மாற்றுக் கருத்தை சொல்லவில்லை.
திமுக கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைவது நிச்சயம்என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications