அதிமுக தாக்குதல்: பாமக எம்எல்ஏக்கள் தப்பினர்
கடலூர்:
பாமக எம்.எல்.ஏக்கள் வேல்முருகன் (பண்ருட்டி), கோவிந்தசாமி(விருத்தாச்சலம்)ஆகியோர் பயணம் செய்த கார் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல்நடத்தினர். இதில் இரண்டு பாமக எம்.எல்.ஏக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு எம்.எல்.ஏக்களும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.அப்போது அவர்களது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்கள் கார் மீது பயங்கரதாக்குதல் நடத்தினர்.
ஆனால் கார் டிரைவர் சாதுர்யமாக காரை வேகமாக செலுத்தினார். இதனால் இருஎம்.எல்.ஏக்களும் உயிர் தப்பினர்.
இருப்பினும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதலை நடத்தியது அதிமுகவினர் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால்கொதிப்படைந்த பாமகவினர், நெய்வேலியில் ரகளையில் இறங்கினர். அதிமுககொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
நகரில் பதட்டம் நிலவியது, போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டனர்.தாக்குதல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுக் கூட்டங்களில் குறிப்பாக நடிகர் ஆனந்தராஜ், வட மாவட்டங்களில்கலந்து கொள்ளும் பிரசாரங்களுக்கு பாமகவினர் இடையூறு கொடுத்து வந்தநிலையில் தற்போது அதே பாணியை அதிமுகவும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.