பாஜகவில் இன்றே கடைசி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பாஜகவில் விண்ணப்பங்கள்பெறும் பணி இன்றுடன் முடிவடைகிறது.

வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாஜக கூறி வருகிறது. ஆனால்,இதேபோல தனித்துப் போட்டியிடப் போவதாக கூறி வரும் விஜயகாந்த் கட்சியுடன்தனியாக ரகசியப் பேச்சுக்களை பாஜக தலைமை நடத்தி வருகிறது.

எனவே இரு கட்சிகளும் சேர்ந்து தனித்துப் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.கூடவே கார்த்திக்கையும் இழுக்க முயற்சி நடக்கிறது.

ஆனால், கார்த்திக்கை வெட்டி விட்டுவிட்டு பாஜக-விஜய்காந்தை கூட்டணிக்குஇழுக்க அதிமுக முயற்சிக்கிறது.

இந் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னையில்உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

பொதுத் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தால் ரூ. 5000ம், பெண்களாக இருந்தால் ரூ.2500மும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித் தொகுதிகள் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மட்டும் போட்டியிடும்தொகுதிகள்) குறித்து பாஜக எதுவும் அறிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு முன்னாள் அமைச்சர்எச்.வி.ஹண்டே இன்று விண்ணப்பம் கொடுத்தார்.

அதேபோல பொதுச் செயலாளர் குமாரவேலு பூங்கா நகர் தொகுதிக்கும், மகளிர் அணிஅமைப்பாளர் லலிதா சுபாஷ் தி.நகர் தொகுதியைக் கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.

இன்று மாலையுடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்வது முடிவடைகிறது.இதையடுத்து வேட்பாளர் தேர்வு நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+