For Daily Alerts
Just In
பரிதி இளம்வழுதியை கைது செய்ய வாரண்ட்
செங்கல்பட்டு:
அவதூறு வழக்கில் ஆஜராகாத, திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு செங்கல்பட்டு முதன்மைஅமர்வு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்த திமுக கூட்டத்தில், முதல்வர்ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாகப் பேசியதாக கூறி பரிதிமீது செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் வழக்குதொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு பரிதி இளம்வழுதி ஆஜராகாமல் இருந்துவந்தார். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுகாவல்துறைக்கு நீதிபதி வாரண்ட் பிறப்பித்தார்.
Story first published: Tuesday, March 14, 2006, 5:30 [IST]