பாமகவின் புதிய நாளிதழ் தமிழ் ஓசை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ் ஓசை என்ற பெயரில் நாளிதழ்தொடங்கப்படவுள்ளது.
திமுகவுக்கு முரசொலி, அதிகவுக்கு நமது எம்ஜிஆர், மதிமுகவுக்கு சங்கொலி,கம்யூனிஸ்டுகளுக்கு தீக்கதிர் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பத்திரிக்கை உள்ளது.இதுதவிர தவிர திமுகவுக்கு சன் டிவி, அதிமுகவுக்கு ஜெயா டிவி என டிவிகளும்உள்ளன.
இந் நிலையில், பாமகவுக்கென்று தனியாக நாளிதழ் ஒன்றைத் தொடங்கப்படுகிறது.தமிழ் ஓசை என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த நாளிதழ் வரும் 16ம் தேதிவெளியிடப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொண்டு முதல் இதழை வெளியிடுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிமுதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.தமிழ் ஓசையின் பதிப்பாளர், வெளியீட்டாளராக பாமக தலைவர் ஜி.கே.மணிசெயல்படுவார். திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications