மோதுவோமா?: கருணாநிதிக்கு செந்தில் சவால்
சிதம்பரம்:
தைரியம் இருந்தால் என்னுடன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுங்கள், பார்ப்போம்என்று திக தலைவர் கருணாநிதிக்கு, காமெடியன் செந்தில் சீரியஸாக சவால்விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுத்துப்பட்டு கிராமங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிதம்பரம் வந்த செந்தில் அங்கு ஓய்வாக செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, தமிழ் மட்டும் படிங்க, இந்தி வேண்டாம்னு கருணாநிதி சொன்னார்.இதுக்காக பெரிய போராட்டமெல்லாம் செஞ்சாங்க.
ஆனால் அவரோடு குடும்ப வாரிசுகள் மட்டும் இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு (இதற்குமேல் சொல்ல செந்திலுக்கு மொழிப் பெயர்கள் தெரியாது போலிருக்கு) எனஏகப்பட்ட மொழிகளைப் படித்துள்ளார்கள், படித்தும் வருகிறார்கள். இது ரொம்பவெட்கக்கேடான சமாச்சாரம்.
எங்களைப் பார்த்து கேலி செய்கிறார் கருணாநிதி. நடிகர்கள் கூட்டம் என்றுகிண்டலடிக்கிறார். அப்படியே இருந்து விட்டுப் போகிறோம், அவருக்குத் தைரியம்இருந்தால், வருகிற தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா? (பாவம்கருணாநிதி).
அவரெல்லாம் என்னை எதிர்த்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது(காலக் கொடுமை...)
பாமகவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டுப் போடாதீங்க. ஏன்னா, விரல்ல வச்ச மைகாயுறதுக்குள்ளேயே வேற கூட்டணிக்குப் போய் விடுபவர் ராமதாஸ். (திஸ் இஸ் ட்ரூ)
இப்படிப்பட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிதான் திமுக கூட்டணி. இது தேறாதகூட்டணி என்றார் செந்தில்.
உஷ்.. அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே!..