இது பரவச கூட்டணி: வைகோ புளகாங்கிதம்!
சென்னை:
அதிமுகவும், மதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி பரவசக் கூட்டணி, அற்புதக்கூட்டணி, அருமையான கூட்டணி என வைகோ கூறியுள்ளார்.
திமுக, காங்கிரஸ் பாமகவிலிருந்து விலகிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள்,பிரமுகர்கள் மதிமுகவில் இணைவதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,மதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ள நீங்கள் எல்லாம் இளஞ் சிட்டுக்கள், இளஞ்சிங்கங்கள்.
தங்களுக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், நாட்டுக்காகவும், அண்ணாவின்கொள்கையை காக்கவும், தாயன்போடு, அரவணைக்கக் கூடிய உண்மையானதாய்ப்பாசம் உள்ள கட்சி மதிமுக என்ற எண்ணத்தோடு இங்கு வந்துள்ளீர்கள்.
இங்கு சுயநலத்துக்கு இடம் கிடையாது, எல்லோரும் சகோதரர்கள். எல்லோரும் இங்குகண்ணின் மணிகள். வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக,மதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். எங்களுக்குஎத்தனை தொகுதிகள்? 234 தொகுதிகளும் எங்களது தொகுதிகள்தான்.
அத்தனை தொகுதிகளிலும் மதிமுகவினர் பம்பரம் போலச் சுழன்று தீவிரப் பிரசாரம்செய்வார்கள். அன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய அன்புச் சகோதரி, புரட்சித் தலைவி(ஆஹா.. வைகோவா இது?) ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவார்.
அதிமுகவுடன் மதிமுக வைத்துள்ள கூட்டணி பரவசக் கூட்டணி, அற்புதக் கூட்டணி,அருமையான கூட்டணி என தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் என்னைசந்தோஷப்படுத்துகின்றன என்றார் வைகோ.
மதிமுகவில் கவிஞர் முத்துலிங்கம்:
இதற்கிடையே, திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம், மதிமுகவில்இணைந்துள்ளார்.
அதிமுகவில் இருந்த முத்துலிங்கம், கடந்த 1998ம் ஆண்டு அதிமுகவிலிருந்துவிலகினார். ஆனாலும் சமீப காலமாக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தார்.
இந் நிலையில் என்ன நினைத்தாரோ தற்போது மதிமுகவில் இணைந்துள்ளார்.மதிமுகவில் பொதுக் குழுக் கூட்டத்தில் வைகோவைச் சந்தித்து மதிமுகவில்இணைந்தார் முத்துலிங்கம்.
எம்.ஜி.ஆரிடம் இருந்த பெருந்தன்மை, மனிதாபிமானம் வைகோவிடம் இருப்பதால்மதிமுகவில் இணைந்ததாக முத்துலிங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், மேல் சபை (எம்.எல்.சி.) உறுப்பினராகவும்இருந்தவர் இந்த முத்துலிங்கம்.