ஜெ.வுடன் நெல்லை கண்ணன் திடீர் சந்திப்பு
சென்னை:
பிரபல காங்கிரஸ் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் இன்றுதிடீரென போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டார். அவருடன் முதல்வர்ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
பழம்பெரும் காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன் சிறந்த பேச்சாளர்,இலக்கியவாதி. பன்முகம் கொண்டவரான நெல்லை கண்ணன் சேப்பாக்கம்தொகுதியில் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.காங்கிரஸ் கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் குறைந்ததால், அதிருப்தியில் இருந்துவந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிமுக தான் மிகச் சிறந்த கட்சி, ஜெயலலிதாதான் மிகச் சிறந்த தலைவர் என்று பாராட்டினார்.
அத்தோடு அதிமுக கூட்டணிக்காக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன் என்றும்அறிவித்தார்.
எதிர் கட்சிகளை உடைக்க எல்லா வகைகளிலும் ஆர்வம் காட்டி வரும் அதிமுகவுக்குநெல்லை கண்ணனின் பேச்சு திருநெல்வேலி அல்வா மாதிரி இனிக்கவே, அவரைசென்னைக்கு வரவழைத்தது அதிமுக.
இன்றுகண்ணனை போயஸ கார்டனில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புத் தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறந்த இலக்கியவாதியும்,தலைசிறந்த சொற்பொழிவாளருமான கண்ணன் முதல்வர் ஜெயலலிதாவை நேரில்சந்தித்துப் பேசினார்.
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும்பிரசாரம் செய்ய தனது விருப்பத்தினை ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைஜெயலலிதா மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
நெல்லை கண்ணன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனைத்துஏற்பாடுகளையும் அதிமுக கவனித்துக் கொள்ளும் என செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடுமாறு கண்ணனிடம்ஜெயலலிதா கூறியுள்ளதாகத் தெரிகிறது.