அண்ணாவின் மருமகள் சுகவீனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் மருமகள் சரோஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வரும், திமுகவை தோற்றுவித்தவருமான அண்ணாவின் வளர்ப்புமகன் சி.என்.ஏ. பரிமளம். இவரது மனைவி சரோஜா.இவர் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். பரிமளத்தின் மனைவிசரோஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாரடைப்புடன், சர்க்கரை வியாதியும் இருப்பதால் சரோஜாவுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications