கலெக்டர் ஆபிசில் குண்டு புரளி-ஊழியர்கள் ஓட்டம்
கடலூர்:
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனவந்துள்ள மிரட்டல் கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு குமரக்குடி என்ற இடத்திலிருந்துபோஸ்ட் செய்யப்பட்டுள்ள கடிதத்தில்,காங்கேசநல்லூர் இளைஞர்கள் என்ற பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை (நாளை) மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடித்துச் சிதறும் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பெரும் பீதி ஏற்பட்டது.பணியில் இருந்த ஊழியர்கள் பதறி ஓடினர். அலுவலகமே பெரும் பரபரப்பில்மூழ்கியது.
தகவல் அறிந்ததும் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் முழுவதையும் சல்லடை போட்டுஅவர்கள் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் நாளை வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால்போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications