தேர்தல் பணிக்கு தற்காலிக ஊழியர்கள்: அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளுக்கு தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாவட்டஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய்த்துறையில் 5,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.தேர்தல் பணிகளில் இத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில்ஈடுபடுத்தப்படுவர்.எனவே இவ்வளவு காலியிடங்கள் இருப்பதால் கூடுதல் ஊழியர்களை நியமிக்கதமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு புதிதாக ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது.அதில், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை அரசின் பல்வேறுதுறைகளிலிருந்து மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குதமிழக அரசு அனுமதித்துள்ளது.
பல்வேறு துறைகளிலிருந்து இளநிலை உதவியாளர்கள், தட்டச்சு ஊழியர்களைவருவாய்த்துறைக்கு தற்காலிகமாக மாற்ற அரசு அனுமதித்துள்ளது.
மேலும், தேவைப்பட்டால், 3 மாதங்களுக்கு தற்காலிக ஊழியர்களை, வேலைவாய்ப்புஅலுவலகம் மூலம் நியமிக்கவும் ஆட்சித் தலைவர்களுக்கு அரசு அனுமதிஅளித்துள்ளது.












Click it and Unblock the Notifications