எங்க கதவும் திறந்து தானே இருக்கு: பாஜக
சென்னை:
கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பாஜக தலைவர்ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னரேமுடிவு எடுக்கப்படும். வெற்றி பெறும் வகையில் (??) தேர்தலில் போட்டியிடவிரும்புகிறோம். காரணம் நாங்கள் தேசிய கட்சி.
யாருடன் கூட்டணி அமைப்பது என்று மாநில நிர்வாகிகள் முடிவு செய்து அகிலஇந்திய கமிட்டிக்குத் தெரிவிப்பார்கள். அதன் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவைஅறிவிக்கிறேன் என்றார் சிங்.
விஜயகாந்த் கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜக முயல்கிறது. அதேசமயம், வேறுசில கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதையும் ஏற்க பாஜக முடிவு செய்துள்ளது.
கூடுமானவரை ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவும்,தனித்துப் போட்டியிடுவதைத் தவிர்க்கவும் பாஜக தீவிரமாக உள்ளது.
இன்று மாலை அமைந்தகரையில் பாஜகவின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில்ராஜ்நிாத் சிங் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications