ஆஸ்திரேலியாவைத் தாக்கிய பயங்கர சூறாவளி
கேன்பெர்ரா:
ஆஸ்திரேலியாவை இன்று காலை மிக பயங்கரமான சூறாவளி தாக்கியது. கன மழையோடு வீசிய இந்தசூறாவளியால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கிவீசப்பட்டன. மின் கம்பங்களும் சரிந்ததால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட கிழக்கே உள்ள குயீன்ஸ்லாந்து மாகாணத்தை இந்த சூறாவளி (சைக்ளோன் லேரி) தாக்கியது.மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் அந்தப் பகுதியே சின்னாபின்னாவானது.இந்த சூறாவளி குறித்த முன்னெச்சரிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பானஇடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பயங்கர சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீரும் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்துள்ளது.இன்னிஸ்பெயில் பகுதியில் வீசிய சூறாவளியால் அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு,வாழை ஆகியவை பெரும் சேதம் அடைந்துள்ளன. 90 சதவீத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
1974ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியாவை தாக்கியுள்ள மிகப் பெரிய புயல் இது.












Click it and Unblock the Notifications