திருவையாறின் வித்தியாசமான வேண்டுகோள்!
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:
எங்களது தொகுதிக்கு மண்ணின் மைந்தரையே வேட்பாளராக அறிவியுங்கள் என்றுஜெயலலிதா, கருணாநிதி, வைகோ ஆகியோருக்கு தஞ்சை மாவட்டம் திருவையாறுதொகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு தொகுதியில் கடந்த சில நாட்களாக வித்தியாசமான சுவரொட்டிகள்தொகுதி சுவர்களை அலங்கரிக்கின்றன.ஒரு சுவரொட்டியில், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ ஆகியோரின் படங்கள்போடப்பட்டுள்ளது. இன்னொரு சுவரொட்டியில் உதயசூரியன், இரட்டை இலை,பம்பரம் ஆகிய சின்னங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குக் கீழே, திருவையாறு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களின்வேண்டுகோள், தலைவர்களே, எங்கள் தொகுதிக்குட்பட்ட மண்ணின் மைந்தர்களைவேட்பாளர்களாக அறிவிக்க வேண்டுகிறோம்என்று கோரப்பட்டுள்ளது.
வெளியாட்களை எங்கள் தொகுதியில் நிறுத்தாதீர்கள் என்ற வகையில் உள்ள அந்தபோஸ்டரை திருவையாறு தொகுதி வாக்காளர்கள் என்ற பெயரில் அடித்துஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications