ரூ.28 கோடி அபராதம்: இழுத்தடிக்கும் தினகரன்
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ரூ. 28 கோடி அபராதத் தொகையைகட்டாமல் டி.டி.வி.தினகரன் இழுத்தடிப்பதாகக் கூறி சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு மனு தாக்கல்செய்துள்ளது.
சசிகலாவின் அக்காள் மகனான தினகரன், அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார்.பல கோடிகளை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள
இவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவானது.
அந்த வழக்கில் அவருக்கு ரூ. 28 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால்,அதை அவர் கட்டாமல் இருந்து வருகிறார்.
இந் நிலையில் சென்னை எழும்பூர் 2வது பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில்அமலாக்கப் பிரிவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம்விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகையை தினகரன் செலுத்தாமல் இழுத்தடித்துவருகிறார்.
இந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்.கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக தினகரன் இழுத்தடித்து வருவதால், அபராதத் தொகைநிலுவையில் இருந்து வருகிறது.
இந்த அபராதத் தொகையை அவரிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் வழிமுறைகளைநிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அமலாக்கப் பிரிவு கோரியுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஆறுமுகம் ஏப்ரல் 4ம் தேதிக்கு விசாரணையைதள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications