நடராஜ்: நீதிமன்றத்தில் திமுக அமைச்சர் மனு
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தொடர்பான வழக்கில் தன்னையும்ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல்அமைச்சர் ஏ.ராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசினார் நடராஜ்.இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் ராஜா புகார் கொடுத்தார்.அந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் நடராஜ் விதிமீறல் ஈடுபட்டதால்அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாஜி டிஜிபிக்களான தேவாரம், பரமகுரு, தமிழக உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் 23ம் தேதி வரை இடமாற்ற உத்தரவைநிறுத்தி வைப்பதாகவும், அதுவரை புதிய ஆணையருக்கான பட்டியலை கோரமாட்டோம் எனவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் மத்திய அமைச்சர் ராஜா சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,
எனது மனுவின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் ஆணையர் நடராஜைஇடமாற்றம் செய்யும் முடிவை எடுத்தது. எனவே நீதிமன்றத்திலும் எனது கருத்தைப்பதிவு செய்யும் வகையில், என்னையும் ஒரு மனுதாரராக இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
22ம் தேதி விசாரணையின்போது ராஜாவின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications