நாகர்கோவிலில் நில நடுக்கம்: மக்கள் பீதி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள சில கிராமங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.இதனால் வீட்டுச் சுவர்கள், தரைகளில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்துவீடுகளை விட்டு ஓடினர்,
நாகர்கோவில் அருகே உள்ள அஞ்சுத் தோப்பு, மயிலாடி, அழகப்பபுரம்,கனகப்பபுரம், சாமித் தோப்பு, மாடன்பிள்ளை தர்மம், தெங்கம்புதூர் உள்ளிட்டகிராமங்களில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 7 மணியளவில் படபடவென்று வெடிவெடிப்பது போல சப்தம் கேட்டது.வெடிகுண்டு எதுவும் வெடித்து விட்டதோ என்று மக்கள் பீதியடைந்தனர். வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
லேசான அந்த நிலநடுக்கம் காரணமாக வீட்டுத் தரை மற்றும் சுவர்களில் பெரியஅளவில் விரிசல்கள் விழுந்தன. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், இப் பகுதியில்மிகவும் லேசான நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ச் சேதம் மற்றும் பெரியஅளவில் பொருட் சேதம் ஏதும் இல்லை.
சில வினாடிககளுக்கு அதிர்வு இருந்துள்ளது. சுவர்களில் விரிசல் விழுந்துள்ளதுஎன்றார்.
நிலநடுக்கம் காரணமாக நாகர்கோவில் அருகே இன்னும் பதட்டம் குறையவில்லை.












Click it and Unblock the Notifications