ரஜினியை மீறும் ரசிகர்கள்: ஜெவுடன் சந்திப்பு- தேர்தலில் போட்டியிட திட்டம்?
சென்னை:
புதுவை மற்றும் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து, தங்களது ஆதரவை அதிமுகவுக்குத் தெரிவித்தனர்.
அரசியல் வேண்டாம் என்று ரஜினி விலகினாலும் ரஜினி மன்றங்கள் சார்பில் வேட்பாளர்களைகளத்தில் இறக்க (ரஜினியின் உத்தரவையும் மீறி) ரஜினி ரசிகர்கள்முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.இதுதொடர்பாக காரைக்குடியில் கூட்டம் போட்டு முக்கிய முடிவை எடுக்கவும்அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந் நிலையில் தஞ்சை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் ஹுமாயூன்தலைமையிலான நிர்வாகிகள், புதுவை ரஜினி மன்றச் செயலாளர் ரஜினி சங்கர்தலைமையிலான ரசிகர்கள் முதல்வர் ஜெயலலிதாவை இன்று திடீரென சந்தித்தனர்.
ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்திய அவர்கள் வரும் தேர்தலில் அதிமுகவுக்குஆதரவாக தீவிரமாக செயல்படப் போவதாக தெரிவித்தனர். அவர்களது ஆதரவைஏற்றுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
அம்மா.. அம்மா..
பின்னர் ரஜினி மன்ற மாவட்டத் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
தமிழகத்தில் நிலவி வரும் வாரிசு அரசியலுக்கு மத்தியில் குடும்பப் பின்னணி இல்லாமல் நடுநிலையான, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,தமிழகத்தை அயல்நாடுகள் வியக்கும் வகையில் (????) வெற்றி கண்டிருக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அம்மா தலைமையில் அமையபாடுபடப் போகிறோம்.
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தும், இரவு பகலாக உழைத்து, பொருள் விரையம் செய்து,குடும்பத்தை மறந்து, உழைத்த எங்களுக்கு அவர்களால் துளி விஷத்துக்குக் கூட பயன் இல்லை. அவர்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
இந்த நிலையில் நாங்கள் ஊண், உறக்கமின்றி உழைத்து வெற்றிக் கனியை அம்மாவின் பொற் பாதங்களில் சமர்பிக்கப் போகிறோம். அம்மா அவர்கள்எங்களுக்குத் தேவையான உதவியையும் பாதுகாப்பையும் எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் வழங்கி காப்பாற்ற வேண்டும்.
எங்கள் வாழ்க்கைத் தரம் அம்மாவின் ஆசியோடு உயர வேண்டும் என்று இறைவனை வேண்டி தேர்தல் களத்தில் இறங்குகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை, புதுவையைப் போல மேலும் பல மாவட்ட மன்றங்களும் அதிமுகவுக்குப்பின்னால் அணி திரளக் கூடும் என்று தெரிகிறது.
ரஜினியையும் மீறி:
பாபா படம் ரிலீஸானபோது பாமகவினரின் அதிரடி அட்டாக் நடவடிக்கையால்அப்படம் பெரும் பிரச்சினையை சந்தித்தது. வட மாவட்டங்கள் பலவற்றில் பாபாபடத்தை ஓட விடாமல் பாமகவினர் பெரும் வன்முறையிலும், ரகளையிலும்ஈடுபட்டனர்.
படமும் சரியில்லாத காரணத்தால் பாபா ஓடவில்லை, பெரும் தோல்விப்படமாகமாறியது. திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைத்துத்தரப்பினரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
பாமகவினரால் சந்தித்த பிரச்சினைகள் ரஜினியை ரொம்பவே அப்செட் செய்துவிட்டது. இதை மனதில் வைத்தும், ரசிகர்களின் கோபத்தை குறைக்கும் வகையிலும்,2004 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில்மட்டும் அதிமுக-பாஜக அக்கட்சிக்கு எதிராக தனது ரசிகர்கள் வாக்களிப்பார்கள் எனரஜினி அறிவித்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லாமல் போய் விட்டது.
இதையடுத்து அரசியலில் இருந்து முழுவதுமாகவே ஒதுங்கிவிட்டார் ரஜினி.அரசியலுக்கும், தனக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது என்பதை ரஜினி புரிந்துகொண்டார். ஆனால் ரசிகர்கள் அப்படி நினைக்கவில்லை. தாங்கள் இன்னும் ஒருசக்திதான் என்று அவர்கள் பிடிவாதமான கருத்தில் உள்ளனர்.
நேற்று அரசியலுக்கு வந்த விஜய்காந்தின் ரசிகர்கள் எல்லாம் கரை வேட்டிசட்டையுடன், வெள்ளை செருப்பு, துண்டுடன், டாடா சுமோக்களில் தேர்தல்வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க 10 வருடமாய் இதோ வரப்போறேன் என்று சொல்லி வந்த ரஜினியை நம்பியிருந்த அவரது அரசியல் ஆர்வம்மிக்க ரசிகர்கள் தரப்பினர், விஜய்காந்த் ரசிகர்களைப் பார்த்து பெரும் சோகத்திலும்கோபத்திலும் உள்ளனர்.
இது சமீபத்தில் கோவையில் எதிரொலித்தது. பாமகவுக்கு எதிராக கோவையில் ரஜினிரசிகர்கள் பெயரில் பெரும் யுத்தம் மூண்டது. பாமகவினரும் பதிலுக்கு மல்லுக் கட்டபிரச்சினை வெடித்தது. சிவாஜி படம் வெளியாகப் போகும் சூழ்நிலையில் இப்படிஒரு பிரச்சினையா என்று யோசித்துப் பார்த்த ரஜினி,
தனது உதவியாளர் சத்யநாராயணன் மூலம், எனது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை,ரசிகர்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம், மன்றப் பெயரை அரசியல்ரீதியாகயாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டார்.
ஆனால் ரசிகர்களிடையே இந்த அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும்ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் முடிவை ஏற்க முடியாது, பாமகவுக்கு சரியான பாடம்புகட்ட இதுவே சரியான தருணம் என்று கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தரசிகர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஜினி இன்னும் 10 நாட்களில் தனது மறைவு நிலையிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி தீவிர அரசியல்நடவடிக்கைளில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
தேர்தலில் குதிப்பு?:
இந் நிலையில் இன்னொரு ரகசிய நடவடிக்கையிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளதாகத்தெரிய வந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் திரட்டிஒட்டுமொத்தமாக தேர்தலில் குதிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மதுரை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், சேலம்உள்ளிட்ட 15 மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காரைக்குடியில் வருகிற 26ம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகவும்இதில் கலந்து கொள்ளுமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
காரைக்குடியில் நடைபெறும் கூட்டத்தில், ரஜினி தனிக் கட்சி தொடங்க வேண்டும்.நேரடியாக களம் இறங்க வேண்டும். அது முடியாவிட்டால் ஏதாவது ஒரு கட்சியைஆதரிக்க வேண்டும் என்று முக்கியத் தீர்மானத்தை இக் கூட்டத்தில் நிறைவேற்றரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கையை ரஜினி ஏற்காவிட்டால் பாமக போட்டியிடும் 31தொகுதிகளிலும் மன்றங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும், பாமகவின்தோல்விக்கு தீவிரமாக பாடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாமகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களைஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இதனால்ரஜினி ரசிகர்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் புதிய பரபரப்புஏற்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களின் இந்தத் திடீர் ஆவேசத்திற்குப் பின்னணியில் ஏதேனும் அரசியல்கட்சி இருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது. ரசிகர்களை முதல்வர்ஜெயலலிதா சந்தித்துள்ளதன் மூலம் அது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ரஜினியின் ஆதரவைப் பெற அதிமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்ததுகுறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக லதா ரஜினிகாந்த்மூலமாக அதிமுக பேசியதாகவும், ஆனால், அதற்கு ரஜினி நோசொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்போது தனது ரசிகர்களில் ஒரு பிரிவினரை அதிமுக இழுத்துள்ள நிலையில் ரஜினிஎன்ன செய்யப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications