ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர்-பெங்களூரில் தமிழ் மாணவி தற்கொலை
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் மாணவி ஒருவர் தனது ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் கதிரேனஹள்ளி கிராஸைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் மீனா (16). இவர் குமாரசாமி லே-அவுட்டல் உள்ளதனியார் மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
அவருடைய ஆசிரியரான பாபி ஜார்ஜ், மீனாவுக்கு அவ்வப்போது செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இது குறித்துதலைமை ஆசிரியரிடம் மீனா பலமுறை முறையிட்டபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை எனறு தெரிகிறது.
இந் நிலையில் நேற்று காலை மீனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், என் சாவுக்கு ஆசிரியர் பாபி ஜார்ஜே காரணம், தலைமை ஆசிரியரும்இதற்கு உடந்தை, இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.என்னுடைய நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று எழுதி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications