வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கு ஒரு வாரம் முன்பு வரை வாக்காளர்பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அறிவித்துள்ளார்.

7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர்செய்தியாளர்களிடம் குப்தா பேசுகையில்,

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெயர்களை சேர்க்க மேலும்ஒரு அவகாசம் தரப்படுகிறது. அதாவது, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்குஒருவாரம் முன்பு வரை பெயர்களை சேர்க்கலாம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக மனுக்களைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.சரியான தகவல்கள் உள்ள மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.34 கோடி. ஆண் வாக்காளர்களின்எண்ணிக்கை 2.30 கோடியாகும்.

கோவை மாவட்டம்தான் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாகவிளங்குகிறது. அங்கு 34.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்துதிருவள்ளூர் மாவட்டத்தில் 27.34 லட்சம் வாக்காளர்களும், சென்னையில் 27.33லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

மார்ச் 19ம் தேதி வரை 39 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 1.60 கோடி வாக்காளர்களுக்குஅடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி வரைபுகைப்பட அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.

அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தையல் இயந்திரங்கள்கொடுத்ததாக வந்துள்ள புகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

அவரது அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார் நரேஷ் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+