சீசரின் மனைவியும், நடராஜும்!
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாக வைகோவின்புகார் நியாயமற்றது, சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடராஜ் இடமாற்றம்செய்யப்படுவதற்கு முன் அவரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்று வைகோகூறியுள்ளார்.மாற்றப்படுதல் என்பது தண்டனை அல்ல என்கிறபோது, எந்த விளக்கமும் அந்தஅதிகாரியிடம் சட்டப்படியோ, நியாயப்படியோ கேட்க வேண்டிய அவசியமேகிடையாது.
தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் சுந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான்தேர்தல் உண்மையான, சுதந்திரமான, நியாயமான தேர்தலாக இருக்க முடியும்.இல்லையேல் தராசு முள் சாய்ந்து விடும்.
2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை மாவட்ட தேர்தல்அதிகாரியாக இருந்த ஆட்சித் தலைவர் மாற்றப்பட்டதை வைகோ மறந்திருக்க முடியாது.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்றபழமொழியை வைகோவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications