வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்
Subscribe to Oneindia Tamil
கத்தார்:
வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
கத்தார் நாட்டில் நடந்த தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் பேசிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறைஅமைச்சர் வயலார் ரவி,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாகமுக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்காக ரூ. 5லட்சத்திற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய தொழிலாளர்கள் அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தூதரகங்களில்பேச வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுகளில் வாழ்வோரின் பங்கு மிக அதிகம் என்றார்.
இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications