சேட்டு வீட்டுக்குள் நள்ளிரவில் சேட்டை:சிக்கினார் மன்மத வாலிபர்!
சென்னை:
ஒரு தலையாய் காதலித்து வந்த மார்வாடிப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து,பீரோவுக்குள் பதுங்கியிருந்து, நள்ளிரவில் வெளியே வந்து அந்தப் பெண்ணிடம்சில்மிஷம் செய்த வாலிபர் பிடிபட்டார். அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை பாடியைச் சேர்ந்தவர் வாசு. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓமோத்ராஜ் என்ற மார்வாடியின் மகள் மீது காதல் பிறந்தது. ஆனால் தனது காதலைஅப்பெண்ணிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.தெரிவித்தால் நிராகரித்து விடுவார், சேட்டுவிடம் சொல்லி ஆள் வைத்து அடிப்பார்என்ற பயம்தான் அதற்குக் காரணம்.
நாளாக ஆக மார்வாடிப் பெண்ணின் மீதான காதல், மோகமாக மாறி, காமத்தைத்தூண்டி விட்டது. இதனால் ஒரு முடிவை எடுத்த வாசு, ஓமோத் ராஜின் வீட்டுக்குள்இரவு 8 மணியளவில் யாருக்கும் தெரியாமல் புகுந்தார்.
பின்னர் அவரது மகளின் அறைக்குள் நுழைந்த வாசு, அங்கிருந்த பெரிய பீரோவைத்திறந்து உள்ளே புகுந்து கொண்டார். நள்ளிரவு வரை மூச்சைப் பிடித்துக் கொண்டுபீரோவுக்குள்ளேயே பம்மிக் கிடந்தார்.
நள்ளிரவானதும் மெல்ல வெளியே வந்தார். அங்கே கட்டிலில் ஓமோத் ராஜின்மகள்அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் கூட இம்புட்டு அழகா என்றுகலவரப்பட்ட வாசு, அவரது அழகில் மெய் மறந்து, அப்பெண்ணை நெருங்கிசில்மிஷம் செய்யத் தொடங்கினார்.
தூக்கம் கலைந்து எழுந்த ஓமோத் ராஜின் மகள், அங்கே ஒரு வாலிபர் நின்று கொண்டுஎன்னென்னவோ செய்வதைப் பார்த்து பயந்து போய், திருடன், திருடன் என்றுகூக்குரலிட்டார்.
இதைக் கேட்டதும் ஓமோத் ராஜ் ஓடி வந்தார். வாசுவைப் பிடிக்க அவர் முயற்சித்தார்.
ஆனால் ஓமோத் ராஜிடமிருந்து தப்பிய வாசு, வீட்டை விட்டு வெளியேறமுயற்சித்தார். சேட்டு வீட்டுக் கதவாயிற்றே, படு ஸ்டிராங்காக இருந்ததால், கதவைத்திறக்க அவரால் முடியவில்லை.
இதனால் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். அதற்குள் போலீஸுக்கு ஓமோத் ராஜ்போன் செய்திருந்தார்.
போலீஸாரும் விரைந்து வந்து வீட்டை முற்றுகையிட்டனர். அதன் பின்னர்போலீஸாரிடம் வாசு ஒப்படைக்கப்பட்டார்.
சேட்டு மகளிடம் சேட்டை செய்த வாசு இப்போது மாமியார் வீட்டுக்குஅனுப்பப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications