மதுரை பல்கலை வேலை வாய்ப்புதிருவிழா: 55 பேருக்கு வேலை!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் 55பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான வேலை நியமன உத்தரவைபல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மருதமுத்து வழங்கினார்.

பல்கலைக்கழக மு.வ. அரங்கில் நடந்த வேலை வாய்ப்புத் திருவிழாவில் 2,000க்கும்மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 55 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் உள்ளஆல்செக் டெக்னாலஜிஸ் என்ற பி.பி.ஓ. நிறுவனத்தில் இவர்கள்பணியமர்த்தப்படவுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களில் 28 பேர் பெண்கள், 27 பேர் ஆண்கள். ஆல்செக்நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவு அதிகாரி மற்றும் பரிவர்த்தனை கண்காணிப்புஅதிகாரிகளாக 55 பேரும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இவர்களின் வருடாந்திர ஊதியம் ரூ 1.2 லட்சம்.
இவர்களுக்கான வேலை நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில்நடந்தது.

இதில் துணைவேந்தர் மருதமுத்து கலந்து கொண்டு 55 பேருக்கும் வேலை நியமனஉத்தரவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தொழில் ஆலோசனைப்பிரிவு டீன் பி.ஆர்.ஆத்தப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆத்தப்பன் கூறுகையில், வெற்றிகரமான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. நல்லஊதியத்துடன், ரூ. 50,000 மருத்துவ காப்பீடு மற்றும் ரூ. 2 லட்சம் உயிர்க் காப்பீடுஆகியவையும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்வழங்குகிறது என்றார்.
இதேபோல பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 22 மாணவர்களை தேர்வு செய்துஅதில் 6 பேரை நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்துள்ளது.












Click it and Unblock the Notifications