For Daily Alerts
Just In
மயக்கம்: அப்பல்லோவில் ஆற்காடு வீராசாமி!
சென்னை:
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சட்டசபைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்பாக தேர்தல் அறிக்கைக்குழுவினருடன் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.அப்போது திடீரென ஆற்காடு வீராசாமிக்கு வாந்தியும், மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Monday, March 27, 2006, 5:30 [IST]