நடராஜ் இடமாற்றல் விவகாரம்: இன்று தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் விதிமுறையை மீறி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் வகையில்பேசியதால் அவரை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்ததை எதிரித்து தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசிய நடராஜ் இடமாற்றம்செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசுஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அத்தோடு மாஜி டிஜிபிக்கள் பொன் பரமகுரு, தேவாரம் ஆகியோரும் பொது நலவழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறவுள்ளது.












Click it and Unblock the Notifications