மாணவர்களை குழப்பிய உலக ரட்சகர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் உலக ரட்சகர் யார் என்றகேள்வியால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ற்ேறு முதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியுள்ளன.முதல் நாளான நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இதில் இடம்பெற்றிருந்தஒரு கேள்வி மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வி: உலக ரட்சகர் யார்?
விடை (ஆப்ஷன்ஸ்): இயேசு, சிவன், திருமால்.
இக் கேள்வி இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்துஅமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மாணவர்கள் மனதில் மதத்தைப் புகுத்தும் செயல்இது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கேள்விக்கு மாணவர்கள் எந்தப் பதிலை எழுதியிருந்தாலும் முழுமதிப்பெண்ணை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.












Click it and Unblock the Notifications