ஓகனேக்கலில் டாஸ்மாக் கடை: எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுற்றுலாத் தலமான ஓகனேக்கலில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் மதுக்கடையை வைக்க அனுமதி தரக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஓகனேக்கலைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஓகனேக்கல் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு பல்வேறுமாநலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் இடத்தில் மதுக் கடையை நிறுவ உரிமம் வழங்க தமிழக அரசின் டாஸ்மாக்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஓகனேக்கலில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிகளை அது பெரும்பாதிப்புக்குள்ளாக்கும். பெண்கள் இங்கு வர யோசிப்பார்கள். சுற்றுலா தொடர்பானஅனைத்துத் தொழில்களும் பாதிக்கப்படும்.

அரசுக்கும், வர்த்தக் துறையினருக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே டாஸ்மாக்கடையைத் திறக்க உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராம், 2 வாரங்களுக்குள் இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+