அமைச்சரின் எளிமை; வாக்காளர்கள் பெருமை!
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் கருப்பசாமியின் எளிமைதான், தொகுதி வாக்காளர்களின்தற்போதைய லேட்டஸ்ட் பேச்சாக இருக்கிறது.
ஆட்டம், பாட்டம் என ஆரவாரமாக இருப்பதுதான் தமிழக அரசியல்வாதிகள்,அமைச்சர்களின் வாடிக்கை. ரொம்ப அரிதாக, சிலர் எளிமையாக, சத்தம்போடாமல்செயலாற்றி வருவார்கள். அந்த வரிசையில் அமைச்சர் கருப்பசாமியை சேர்க்கலாம்.ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருப்பவர் கருப்பசாமி. ரொம்பவும்எளிமையானவர். சாதாரண செருப்புதான் போடுவார். ஆடம்பரமாக செலவுகள்செய்ய மாட்டார் என இவரைப் பற்றி அதிமுகவினரும், தொகுதி மக்களும்பெருமையாக கூறுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பசாமி, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில்அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். புரட்சிப் புயல் வைகோ,சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட தனது சொந்த ஊரானகலிங்கப்பட்டியிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருப்பசாமி, செருப்பு கூட போடாமல்மேடையில் நின்றிருந்தார். சாதாரண சட்டை, வேட்டியில் படு எளிமையாக இருந்தகருப்பசாமியைப் பார்த்து தொகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், பெருமையுடனும்பேசிக் கொண்டனர்.
கருப்பசாமி மட்டும் எளிமையானவர் இல்லை. அவரது குடும்பத்தினரும் அப்படியேதான் உள்ளனர். மகன் அமைச்சராயிற்றே என்று சும்மா உட்காராமல், வயல் வேலைபார்த்து வருகிறார்கள் கருப்பசாமியின் பெற்றோர்.
கருப்பசாமி எளிமையான மனிதர் மட்டுமல்ல, நல்ல பாடகர் என்பதும் பலருக்குதெரியாது. எம்ஜிஆர் படப் பாடல்களை மட்டுமே பாடும் கருப்பசாமி, 1996ம் ஆண்டுதேர்தலில் அதிமுக தமிழகம் முழுவதும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தபோதும்,சங்கரன்கோவில் தொகுதியில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுசாதனை படைதார்.
பந்தா, ஜபர்தஸ்து, அடாவடி, அட்டகாசம் என அரசியல்வாதிகளுக்கே உரிய எந்தவிதஇலக்கணம் இல்லாத சிம்பிள் மனிதர் கருப்பசாமி என்று தொகுதி மக்கள்பெருமையாக கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட எளிமையான கருப்பசாமியை ஆதரித்து வைகோ பிரசாரம்செய்தபோது கருப்பசாமியை வெகுவாக புகழ்ந்தார். இதனால் கூச்சத்தில் வளைந்து,நெளிந்தார் கருப்பசாமி.
இப்படியும் சில அரசியல்வாதிகள்!












Click it and Unblock the Notifications