அண்ணா பல்கலை துணைவேந்தர் மீது வழக்கு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வாதன் இரட்டைப் பதவி வகித்துவருவதாகவும், ஒரு பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரியும்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரட்டைப் பதவி பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஊதியத்துடன் கூடிய இரு பதவிகளைவகிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ளமனுவில்,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் டி.விஸ்வநாதன், அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலின் தென் மண்டலத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இதன்மூலம் அரசு ஊதியம் பெறக் கூடிய இரு பதவிகளை அவர் வகிக்கிறார்.
எனவே பல்கலைக்கழக துணைவேந்தர் அல்லது அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சிலின் தென் மண்டலத் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அகில இந்தியத் தொழில்நுட்பக்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications