அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல்- 60% ஒட்டுபதிவு
கெளஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்றுநடந்தது. 65 தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந்தத் தொகுதிகளில் மொத்தம் 515 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 92,07,504பேர் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்தனர்.65 சட்டசபை தொகுதிகளில் 34 தொகுதிகளில் அஸ்சாம் மாநிலத்தில் மேல்பகுதிகளில் அமைந்துள்ளன. 15 வாக்குச்சாவடிகள் பள்ளதாக்குகளில்அமைந்துள்ளன. 10 தொகுதிகள் கம்ரூப் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
காலை 7 மணிக்கு ஒட்டுபதிவு துவங்கும் போது நல்ல மழை பெய்து ஒய்ந்திருந்தது.வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலன வாக்காளர்கள் வீட்டியேஇருந்தனர். மதியதிற்கு மேல் ஒட்டுபதிவு விறுவிறுப்படைந்தது.
எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீசார், மத்திய ரிசர்வ் படையினருடன் ராணுவமும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முதன் முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் ஒட்டுபதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications