For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்பு சகோதர் வைகோவும் அன்பு சகோதரியும்

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்:

எனது அருமைச் சகோதரர் வைகோ மிகப் பிரமாதமாக பிரசாரம் செய்கிறார். அவருக்குஎனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் ஜெயலலிதா சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர்அருண்மொழித் தேவனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர் தனியார்தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அரசியலில் நிரந்தர பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்றுபலமுறை கூறியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில்தான் அதிமுகவுடன், மதிமுகவும் இணைந்து தேர்தலைசந்தித்துள்ளது.

எனது அருமைச் சகோதரர் வைகோ மிகப் பிரமாதமாக பிரசாரம் செய்து வருகிறார்.அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் முயற்சிகளை எனதுதலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வந்தது. இதன் விளைவாக இன்று பலதுறைகளில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

அடுத்த எனது கனவு, தமிழகத்தை, வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், அயர்லாந்து,மலேசியா போன்ற நாடுகளின் வரிசையில் உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதுதான்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் எங்களது ஜனநாயக மக்கள கூட்டணி மிகப் பெரும்வெற்றியைப் பெறும் என்றார் ஜெயலலிதா.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X