கருணாநிதியும், காமச்சுவையும்: வைகோ தாக்கு
உசிலம்பட்டி:
அரசியல்ரீதியாக நான் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல்ரீதியாக பதில் சொல்வதைவிட்டு விட்டு காமச் சுவை ததும்பும் சிறுகதையைக் கூறுகிறார் கருணாநிதி என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்மகேந்திரனுக்கு ஆதரவாக வைகோ அங்கு பிரசாரம் செய்தார். பெரும் ஜனத்திரளுக்குமத்தியில் அவர் பேசுகையில்,தலைவர் கலைஞரைப் பார்த்து அரசியல் ரீதியாக கேள்விகள் கேட்டு வருகிறேன்.ஆனால் இன்றைக்கு யசோதர காவியம் என்ற காமச் சுவை ததும்பும் சிறுகதையைமேற்கோள் காட்டி எதையோ பேசியுள்ளார் தலைவர்.
எங்களது கட்சி எம்.பிக்களை அடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கிவிட்டது திமுக என்று மார்ச் 6ம் தேதி குற்றம் சாட்டினேன்.
யாராக இருந்தாலும், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் மீது பாய்ந்து பதில் கனைதொடுக்கும் கலைஞர், இந்தக் கேள்விக்கு மட்டும் 25 நாட்களாகியும் பதில்தரவில்லையே ஏன்? உண்மை என்பதால் பதில் கூறவில்லையா.
தீண்டத்தகாதவன் என்று என்னைக் கூறிய டிவியில் இன்று என்னைத் தினசரி காட்டிவருகிறார்கள். சந்தோஷம்தான். எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதிமாறன்.
அந்த வக்கீல் நோட்டீஸின் முதல் பாராவில் என்ன எழுதியிருக்கிறது என்றால், எனதுகட்சிக்காரர் தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தனையும் திமுக தொண்டன் சிந்திய ரத்தத்தில் வந்தது.
அந்த நோட்டீஸில் 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பும், ரூ. 1 கோடிநஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
சூரியன் அஸ்தமனமாகப் போகிறது. அவர்கள் கொடுத்த கெடுவும் முடியப் போகிறது.இந்த வைகோ தூக்கு மேடைக்குக் கூட தலை கொடுக்கத்தான் போவானே தவிரமண்டியிட மாட்டான்.
தயாநிதி மாறன் அவர்களே சீக்கிரமாக வழக்கைப் போடுங்கள்.
இரும்புத் திறைக்குள் மறைந்து கிடக்கும் ஓராயிரம் ரகசியங்களை வெளிக்கொணருவேன். நானே வாதாடுவேன், கூண்டில் ஏற்றுவேன், குறுக்கு விசாரணைசெய்வேன் என்றார் வைகோ.
INDIA NEWS |