சுனாமி-காணாமல் போன சிறுவன் கிடைப்பானா?
கடலூர்:
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடந்த சுனாமிதாக்குதலின்போது காணாமல் போன உதகை சிறுவன் தெல்ஹா குறித்த புதிய துப்புகிடைத்திருப்பதால் போலீஸாருக்கும், தெல்ஹாவின் உறவினர்களுக்கும் புதுநம்பிக்கை கிடைத்துள்ளது.
உதகையைச் சேர்ந்தவர் சபிபுல்லா. இவர் தனது மனைவி, இரண்டு மகன்களுடன்கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் சுற்றுலாமேற்கொண்டிருந்தார். 26ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் சபிபுல்லாகுடும்பத்தினர் கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, உலகையேக் கலக்கிசுனாமி அலைத் தாக்குதல் நடந்தது.இதில் சிக்கிய சபிபுல்லா, அவரது மனைவி, ஒரு மகன் ஆகியோர் பரிதாபமாகஇறந்தனர். அவர்களது காரில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த சபிபுல்லாவின் இன்னொருமகன் தெல்ஹா கடல் அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டான்.
அவன் உயிரிழந்திருக்கக் கூடும் என எண்ணிய சபிபுல்லாவின் உறவினர்கள் அவனதுஉடலைத் தேடி பார்த்தனர். கிடைக்காததால் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பன்னீர் செல்வத்திடம் புகார் கொடுத்தனர்.
தெல்ஹாவின் புகைப்படத்தைப் பார்த்த பன்னீர் செல்வம், இந்த சிறுவனை நான்தான்காரிலிருந்து மீட்டு அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்தேன் என்று கூறதெல்ஹா விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
தெல்ஹா ஏதாவது ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றுகருதிய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் தெல்ஹாகுறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லலை.
இதையடுத்து சிறுவன் தெல்ஹா வெளிநாட்டுக்கு விற்கப்பட்டிருக்கக் கூடும் என்றுபோலீஸார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்துவந்தது.
தெல்ஹா தொடர்பாக எந்தவித துப்பும் கிடைக்காததால் போலீஸார்சோர்வடைந்திருந்தனர். இந் நிலையில் தெல்ஹாவைத் தேடி வந்த அவனதுஉறவினர்கள், சுனாமித் தாக்குதல் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களை வைத்துதீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு புகைப்படத்தில் தெல்ஹா இருப்பது தெரியவந்தது.
ஒரு சிறுமியின் மடியில் தெல்ஹா மயங்கிய நலையில் கிடக்கிறான். அவனைப்பார்த்து அந்த சிறுமி கதறி அழுது கொண்டிருக்கிறார். அருகே இரண்டு பெண்கள்அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றனர்.
இதைப் பார்த்து புது நம்பிக்கை பெற்ற தெல்ஹாவின் உறவினர்கள், உடனடியாககடலூர் மாவட்ட காவல்துறையை அணுகி புகைப்படத்தைக் கொடுத்தனர்.
புகைப்படத்தைப் பார்த்த போலீஸாரும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணைநடத்த 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரு பெண்களையும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இன்னும் ஓரிரு நாட்களில் தெல்ஹா குறித்து தகவல் தெரிந்து விடும் எனபோலீஸாரும், உறவினர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
INDIA NEWS |