சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் கலாட்டா!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டதை எதிர்த்துஆயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதி வேட்பாளராக அன்பரசுவின் மகன் அருள்அன்பரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்தலைவர் முனிரத்தினம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது தலைமையிலஆயிரக்கணக்கான காங்கிரஸார் இன்று காலை சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்தனர்.தொகுதிக்கு சற்றும் அறிமுகமே இல்லாத அருள் அன்பரசுவை உடனடியாக மாற்றவேண்டும். அவரை வேட்பாளராக ஏற்க முடியாது. மீறி நிறுத்தினால் தோற்கடிப்போம்என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியையும் சந்தித்து அவர்கள் முனிரத்தினத்தையேவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டு போராட்டம்நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications