For Daily Alerts
Just In
இந்தியில் திருவாசகம்: பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வெளியீடு
டெல்லி:
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் நடந்தநிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற பெயருமை உடையதுதிருவாசகம்.மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் நூல் பல்வேறு மொழிகளிலும்வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரும் தமிழறிஞரும் சமூக சேவகருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இந்தநூலை வெளியிட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தித் துறை தலைவர்ஆர்.கே.சேத், திருவாசகத்தை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் டெல்லியில் நடந்தது.
நூலை சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட முதல் பிரதியை எல்.எம்.சிங்வி பெற்றுக்கொண்டார்.
நூலின் ஒரு பிரதியை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து வழங்கினார்பொள்ளாச்சி நா. மகாலிங்கம்.
Comments
Story first published: Thursday, April 13, 2006, 5:30 [IST]