தயாநிதியை கோர்ட்டில் சந்திப்பேன்: வைகோ
Subscribe to Oneindia Tamil
சீர்காழி:
தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள வழக்கால் பயப்படவில்லை. அவரை நான் கோர்ட்டில்சந்திப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சீர்காழி விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் உஞ்சை அரசன் என்ற துரைராஜனைஆதரித்து வைகோ பேசுகையில், என் மீது வழக்குப் போட்டுள்ளார்கள். அதை சந்திக்கநான் அஞ்சவில்லை. தயாநிதி மாறன் என்ன வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை,அதை, அவரை கோர்ட்டில் சந்திப்பேன்.நான் அன்புக்குக் கட்டுப்படுவேன், பாசத்திற்குக் கட்டுப்படுவேன். தொண்டனுக்குத்தொண்டனாக அவனுக்கு தொண்டு ஊழியமும் செய்வேன். அப்படித்தான் நான்வாழ்ந்து இருக்கிறேன். எனவே இந்த வழக்கையும் அந்த வழியில் சென்று சந்திப்பேன்என்றார் வைகோ.
பின்னர் நாகூரில் அவர் பேசுகையில், கருணாநிதி ஆட்சியில்தான் கோவையில் குண்டுவெடித்தது. அந்த குண்டுவெடிப்பின்போது கைது செய்யப்பட்ட முஸ்லீம்கள்வெளியே வர முடியாத அளவுக்கு சிறையில் வாடிக் கொண்டுள்ளர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான சோதனைஎன்ற பெயரில் அவர்கள் வஞ்சிக்கப்படுவது கலைஞர் ஆட்சியில்தான் தொடங்கியதுஎன்றார் வைகோ.












Click it and Unblock the Notifications